சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதலால், இம்மாநில முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் விலகினார். பின்னர் அவர், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லிக்கு சென்று சந்தித்து பேசியதால், அவர் பாஜ.வில் இணையவதாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், புதிய கட்சி தொடங்கப் போவதாகவும், விவசாயிகளின் பிரச்னைக்கு தீர்வு கண்டால் பாஜ.வுடனும், மேலும், அகாலி தளத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடனும் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக அமரீந்தர் கடந்த வாரம் அறிவித்தார்.