புழல் சிறை ஊழியர்கள் கொரோனாவுக்கு உயிரிழப்பு

புழல்: கொரோனா தொற்றால் புழல் சிறை ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். குன்றத்தூர் மலையம்பாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (47). இவர் புழல் தண்டனை சிறையில் லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 22ம் தேதி கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதால், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி  நேற்று காலை  இறந்தார். இதேபோல் புழல் மத்திய விசாரணை சிறையில் இளநிலை உதவியாளரான தேன்மொழி (41), தனது குடும்பத்துடன் சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.  இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும்  பெண் குழந்தை உள்ளன.  இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 20ம் தேதி சென்னை ராஜிவ்காந்திஅரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்….

The post புழல் சிறை ஊழியர்கள் கொரோனாவுக்கு உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: