புதுடெல்லி: பஞ்சாப்பில் காங்கிரஸ் தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனால், அவர் பாஜ.வில் இணைய போவதாகவும் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் புதிய கட்சி தொடங்க இருப்பதாக நேற்று இரவு அறிவித்தார்.