நாகை: நாகையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மற்றும் நாகை மீனவர்கள் திடீரென்று பயங்கரமாக மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூம்புகாரை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மீனவர்கள், 7 விசை படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதேபோன்று நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பூம்புகார் மீனவர்கள் தடை செய்யப்பட்ட ஸ்பீட் இன்ஜினை பயன்படுத்தியதற்கு நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.