பொன்னமராவதி பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள்: அப்புறப்படுத்த வலியுறுத்தல்

பொன்னமராவதி: பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் நாய் மற்றும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. பேருந்து நிலையத்தில் மாடுகள், ஆடுகள், நாய்கள் என எல்லாவித கால்நடைகளும் இங்கு கூடுகிறது. குறிப்பாக மாடுகள் அதிகளவில் நிற்பதால் பேருந்துகள் வந்து செல்ல இடையூறு ஏற்படுகிறது. மேலும் மாடுகளால் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதே போல நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகிறது. இதனால் பேருந்து நிலைய கடைகளுக்கு வருவோர் பேருந்திற்கு வருவோர் அச்சத்துடன் சென்று வரவேண்டிய நிலையுள்ளது. நேற்று மாலை மழை பெய்தது. நகரப் பேரூந்து செல்லும் பகுதி மற்றும் புறநகர பேருந்து செல்லும் பகுதிகளில் கும்பல் கும்பலாக மாட்டுச்சந்தைகள் போல மாடுகளும், நாய்களும் நிற்கிறது. எனவே பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: