பொன்னமராவதி: பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் நாய் மற்றும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. பேருந்து நிலையத்தில் மாடுகள், ஆடுகள், நாய்கள் என எல்லாவித கால்நடைகளும் இங்கு கூடுகிறது. குறிப்பாக மாடுகள் அதிகளவில் நிற்பதால் பேருந்துகள் வந்து செல்ல இடையூறு ஏற்படுகிறது. மேலும் மாடுகளால் பொதுமக்களும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.