சென்னை: ராயபுரம் பழைய ஆடுதொட்டி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த மாதம் 28ம் தேதி காணவில்லை என்று சிறுமியின் பெற்றோர் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில், சிறுமிக்கு, மீஞ்சூரை சேர்ந்த விஜயகுமார் (எ) விஜய் (20) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதும், அவர் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை வேளச்சேரி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் அன்று இரவு சிறுமியை கொண்டு வந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றதும் தெரியவந்தது. இந்நிலையில், சிறுமி அங்கிருந்து ஆட்டோவில் ராயபுரம் வந்துள்ளார். அங்கு, ஏற்கனவே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பழைய ஆடுதொட்டி சாலையை சேர்ந்த இளையராஜாவை பார்த்துள்ளார்.