சென்னை: கோயில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிராக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இந்து முன்னணி சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:
நகைகளை உருக்கும் திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தங்கத்தை உருக்கும் திட்டம் முறைகேட்டுக்கு வழிவகுக்கும். எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும்.