சென்னை: கனமழை காரணமாக பாபநாசம் அணை, சேர்வலாறு அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் 1,500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.