வால்பாறை: வால்பாறையில் இரண்டாம் கட்ட சீசன் களை கட்ட தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், வால்பாறையில் தற்போது நிலவும் காலநிலை நன்றாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் வால்பாறையை வட்டம் அடித்தபடி உள்ளனர். வால்பாறையில் குறைந்த செலவில் நிறைந்த குளுமையும், மன நிம்மதியையும் வால்பாறையில் பெற முடிவதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். எனவே, வால்பாறையை சுற்றுலாவிற்கு தேர்ந்தெடுத்தாக கூறும் சுற்றுலா பயணிகள், படகு இல்லம் மற்றும் பூங்கா பணிகள் விரைவில் முடித்து, நடைமுறைக்கு வந்தால் கூடுதல் நாட்கள் வால்பாறையில் தங்கலாம் என்கின்றனர்.