திருவள்ளூர்: பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜான்சிராணி என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் பதவியேற்ற நாள் முதல் ஒன்றிய பொதுநிதியில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாகவும், கொரோனா காலத்தில் பிளீச்சிங் பவுடர் வாங்குவதிலிருந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு பல லட்ச ரூபாய் கையாடல் செய்துள்ளார். நடவடிக்கை எடுத்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அதிமுக ஒன்றியக் குழு தலைவர் ஜான்சிராணி மீது 12 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட 9 பேர் திருத்தணி வருவாய் கோட்ட அலுவலரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவின் மீது வருவாய கோட்ட அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரனிடம் மீண்டும் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்பட 9 பேரும் கோரிக்கை மனு அளித்தனர்.