நடிகர் நெடுமுடி வேணு உடல் தகனம்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் நெடுமுடி வேணு (73). தமிழில் இந்தியன், சர்வம் தாளமயம், அந்நியன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் இறந்தார். அவருக்கு கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், முதல்வர் பினராய் விஜயன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

அவரது உடல் நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் நேற்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள அய்யங்காளி அரங்கத்தில் வைக்கப்பட்டது. மதியம் தைக்காடு மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Related Stories: