புதுடெல்லி: அரியானாவை சேர்ந்த சர்ச்சை சாமியார் ராம்ரஹீம்(55). இவர் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். சிர்சாவில் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்த இவர் அங்கு இரு பெண்களை பலாத்காரம் செய்தார். இந்த குற்றச்சாட்டில் நீதிமன்றம் சாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2002ம் ஆண்டு ஆசிரமத்தின் மேலாளராக இருந்த ரஞ்சித்சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார்.