துபாய்: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜனாதிபதியால் விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டும் அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டு தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நஷ்ஹத் பஹீமா என்ற பெண்ணுக்கு சிறந்த மனித நேய பணிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.