சேலம்: சேலம் அருகே தண்ணீர் குழாயை உடைத்து, விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் அதிமுக எம்எல்ஏவின் தந்தை உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பெரியேரிப்பட்டி பூதனூரை சேர்ந்தவர் பிரபாகரன் (38), விவசாயி. இவரது வீட்டருகே மேல்நிலை குடிநீர் தொட்டி இருக்கிறது. கடந்த 29ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த நல்லதம்பி, குமரவேல் ஆகியோர், அந்த குடிநீர் தொட்டியின் குழாயை உடைத்தனர். இதை தட்டிக்கேட்ட பிரபாகரனை அசிங்கமாக திட்டி விட்டு சென்றுள்ளனர். பின்னர், அதே நாள் மாலை, பிரபாகரனின் விவசாய கிணற்றில் இருந்து அவரின் வீட்டிற்கு வரும் தண்ணீர் குழாயை நல்லதம்பி, குமரவேல் ஆகியோர் கடப்பாரை, மண்வெட்டியால் வெட்டி உடைத்தனர்.