கரூர்: கரூர் மாவட்ட கவுன்சிலர் 8வது வார்டில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தாந்தோன்றிமலை மையத்தில் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. அப்போது வாக்கு பெட்டிகளை டேபிள் மாற்றி வைத்ததால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் 8 பஞ்சாயத்து வாரியாக வாக்கு எண்ண முடிவு செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் மந்த்ராசலம் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை ஒன்றரை மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு துவங்கியது. முதலில் கோயம்பள்ளி ஊராட்சி வாக்குகள் எண்ணப்பட்டது. ஒரு வாக்குசீட்டை பெண் அலுவலர் எடுத்து காட்டினார்.