குளித்தலை : கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்புபலத்த மழை பெய்தது. இந்நிலையில் குளித்தலை ஒன்றியம் வைகநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு மயிலாடி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புளியமரம் ஒன்று இரண்டாக பிளந்து வேருடன் சாய்ந்தது. அவ்வாறு சாய்ந்த புளியமரம் அப்பகுதியிலுள்ள துரைசாமி மற்றும் பிரேமா என்பவருக்கு சொந்தமான 2 ஓட்டு வீடுகளின் மேல் சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த துரைசாமி மற்றும் அவரது மகள் ஸ்வேதா ஆகியோரின் மீது ஓடு விழுந்ததில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.