சென்னை: சாலிகிராமம், காந்தி நகர், வால்மீகி தெருவை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (72). ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. இவர், தனது மனைவி சீதாவின் 30 சவரன் நகைகளை பீரோவில் வைத்திருந்தார். கடந்த வாரம் நவராத்திரி கொலு பூஜையின்போது, சீதா தனது நகைகளை எடுத்து அணிவதற்கு பீரோவை திறந்து பார்த்துபோது, நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.