திருவேங்கடம்: தென்காசி மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், குருவிகுளம் ஒன்றியத்தில் 2வது கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இங்குள்ள கலிங்கப்பட்டி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி வாக்களித்தார். அவரது சகோதரர் வை.ரவிச்சந்திரன், வைகோவின் மகன் துரை வையாபுரி மற்றும் குடும்பத்தினர் வரிசையில் நின்று வாக்களித்தனர். பின்னர் வைகோ அளித்த பேட்டி: எந்தாண்டும் இல்லாத அளவில் இந்தாண்டு ஒற்றுமையுடன் எங்கள் ஊர் தேர்தல் நடந்தது. அதற்கு காரணம் எனது மகன் துரை வையாபுரி. அனைத்து மக்களையும் அரவணைத்து ஒற்றுமையுடன் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.