லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமின் 15ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, லக்னோவில் நேற்று இக்கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், இக்கட்சியின் தலைவரும், உபி முன்னாள் முதல்வருமான மாயாவதி பேசியதாவது: உத்தர பிரதேசத்தில் அயோத்தி, மதுரா, காசியில் தற்போது பாஜ அரசு செய்து வரும் மதம் சார்ந்த பணிகள் அனைத்தும், எனது ஆட்சியில் தொடங்கப்பட்டவைதான்.