மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் கடந்த 3 நாட்களாக நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறியதாவது: வங்கிகளுக்கான கடன் வட்டியான ரெப்போ வட்டி விகிதம் 8வது முறையாக எவ்வித மாற்றமுமின்றி 4 சதவீதமாக தொடரும். இதுபோல் ரிசர்வ் ரெப்போ வட்டி 3.35 சதவீதமாக தொடரும். வரும் 2022ம் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. இந்திய பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் உள்ளது. இருப்பினும் கொரோனாவுக்கு முந்தைய அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை.