தவாங்: இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன படைகள் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயற்சி செய்த போது மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய தவாங் பகுதியில் இந்த மோதல் சில மணி நேரங்கள் வரை நீடித்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. சீனப்படைகளை இந்திய படைகள் தடுத்து நிறுத்தியதாகவும், அதன்பிறகு இரு தரப்பிலும் உள்ளூர் படை தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மோதல் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.