கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டை கருப்பத்தூரை சேர்ந்தவர் கோபால் (52). இவரது மனைவி பொன்மணி. இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச மோட்டார் போடுவதற்காக கோபால் சென்றுள்ளார். அப்போது அருகில் வாழைத்தோப்பில் பதுங்கியிருந்த மர்மகும்பல் அவரை சுற்றி வளைத்து கால், தோள் பட்டை, தலை மற்றும் முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் கோபால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கரூர் எஸ்பி சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.