திருவள்ளூர்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காக்களூர் ஏரிக்கரையில் நேற்று மக்கள் குவிந்தனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோயில் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் நேற்றுமுன்தினம் மாலை முதல் நேற்று இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க கோயில் சுற்றுப்புற பகுதி மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் ஏரிக்கரை உள்ளிட்ட பகுதியில் குவிந்தனர்.