புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் குஷேஷ்வர் அஸ்தான், தாராப்பூர் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் போட்டியிடும் லோக் ஜனசக்தி கட்சியில் சிராக் பஸ்வான், பசுபதி குமார் பராஸ் ஆகியோர் இருபிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், கட்சியின் பெயரையும், அதன் ‘பங்களா’ சின்னத்துக்கும் உரிமை கோரி இருவரும் இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகினர். இதன் மீது விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், ‘இருவரும் லோக் ஜனசக்தி என்ற கட்சி பெயரையும், அதன் ‘பங்களா’ சின்னத்தையும் இறுதி முடிவு எடுக்கும் வரை பயன்படுத்த கூடாது’ என்று உத்தரவிட்டது.