கடலூர்: கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டையில் இடி தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் காலை முதல் கடலூர், ரெட்டிச்சாவடி, நெல்லிக்குப்பம், ஆலப்பாக்கம், பெரியப்பட்டு, பண்ருட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் கடலூர் சாமியார்பேட்டை கடற்கரையில் இன்று காலை வழக்கம் போல் மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பிய சுமார் 10 மீனவர்கள், படகில் இருந்து மீன்களை இறக்கி வைத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இடி தாக்கியுள்ளது.