டேராடூன்: ஆம்ஆத்மி கட்சியின் முன்னாள் மாநில தலைவரின் மகன், ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது, மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநில ஆம்ஆத்மி முன்னாள் தலைவர் கலெர் என்பவரின் மகன் சிக்கந்தர் கலெர் (24) நைனிடாலின் ராஜ்புத் சாலையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் தனது அறையிலிருந்து வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள், சிக்கந்தர் தங்கியிருந்த கதவை தட்டினர். ஆனால், கதவு உள்தாழிட்டு இருந்ததால் எவ்வித பதிலும் கிடைக்காததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஓட்டல் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையில் சிக்கந்தர் இறந்து கிடந்தார். ேபாலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்துபோன சிக்கந்தர் சம்பவ நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார்.