கோவை : கோவை உள்பட 4 மாவட்ட காவல்துறை களப்பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம் கோவை சரக டிஐஜி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் வழிக்காட்டுதலின்படி, கோவை காவல் சரகத்திற்கு உட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட காவல்துறையை சேர்ந்த களப்பணியாளர்களுக்கு “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் சரக அளவிலான குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கோவை சரக போலீஸ் துணை தலைவர் (டிஐஜி) அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கோவை சரக டிஐஜி முத்துசாமி தலைமை வகித்தார்.