கொல்கத்தா: நாடு முழுவதும் 3 மக்களவை தொகுதிகள், 30 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், மேற்கு வங்கத்தில் உள்ள பவானிபூர் தொகுதியில் முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் இவர் தோற்றார். ஆனாலும், தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வென்றதால் மீண்டும் முதல்வராகி உள்ள மம்தா, 6 மாதத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டியது அவசியமாகும்.