டெல்லி: பஞ்சாப் மாநில தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து பதவி விலகலால் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அனைத்தும் சுமூகமாக உள்ளதாக மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் தெரிவித்திருக்கிறார். பஞ்சாபில் காங்கிரஸ் உட்கட்சி பூசலால் அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் மாற்றப்பட்டு புதிய முதலமைச்சராக சரண் ஜித் சிங் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் அமரீந்தர் சிங் பதவி விலக காரணமான மாநில காங்கிரஸ் தலைவர் சித்து பதவி விலகி உள்ளார். இதனிடையே பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், சித்துவை அவருடைய இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.