அபுதாபி: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 136 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் பந்துவீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் தொடக்க வீரர்கள் கேப்டன் கே.எல்.ராகுல், மன்தீப் சிங் முதல் விக்கெட்டுக்கு 36 ரன் சேர்த்தனர். மன்தீப் 15 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த அதிரடி வீரர் கிறிஸ் கேல் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ராகுல் 21 ரன்னில் ஆட்டமிழக்க, பூரன் 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.