விருதுநகர் : விருதுநகர் நகராட்சி பகுதிகளில் குப்பைக்கு தீவைப்பதால் வாகன ஓட்டிகள் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர்.விருதுநகர் நகராட்சி பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்ட நிலையில், குப்பைகளை வீடு, வீடாக வாங்கும் நடைமுறை தொடர்கிறது. பல பகுதிகளில் வீடுகள், கடைகளுக்கு சென்று குப்பை வாங்கும் நடைமுறையில் தொய்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் குப்பைகளை தெரு ஓரங்கள், சாலையோரங்கள், கவுசிகா ஆற்றுப்படுகை, திறந்த வெளிகளில் கொட்டி தீ வைத்து விடுகின்றனர்.