திருவள்ளூர்: மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ்(26). ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களான வானகரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(26), பட்டாபிராம் சோரஞ்சேரி பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(27) ஆகியோருடன் தனது காரில் திருவள்ளூர் நோக்கி சென்றுள்ளார். பின்னர் அரண்வாயல் பகுதியில் பூண்டிலிருந்து செம்பரம்பாக்கம் செல்லும் கிருஷ்ணா கால்வாய் இணைப்பு பகுதியில் குளிக்க சென்றார். பின்னர் மூவரும் இணைப்பு கால்வாயில் இறங்கி குளித்தனர். அப்போது, சஞ்சீவ் ஆழமான பகுதியில் சிக்கி கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.