ஈரோடு : ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு எம்.எஸ்.கே. நகரில் தி.மு.க. முப்பெரும் விழாவையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, தி.மு.க., ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். பகுதி கழக செயலாளர்கள் ராமச்சந்திரன், நந்தகோபால், அக்னிசந்துரு, மணிகண்டராஜா, தி.மு.க., நிர்வாகி வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.