மெட்ஸ்: மோசெல் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு ஆண்டி முர்ரே, பாப்லோ கேரனோ மற்றும் ஹோல்கர் ருனே ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். பிரான்சின் மெட்ஸ் நகரில் மோசெல் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரர் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே, கனடா வீரர் வாசேக் பாஸ்பிசில்லுடன் மோதினார். துவக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய முர்ரே, 6-3, 6-3 என நேர் செட்களில் பாஸ்பிசில்லை வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அனுபவ வீரர் பாப்லோ கேரனோவுடன், ஸ்வீடனின் இளம் வீரர் மிகேல் ஒய்மெர் மோதினார்.