கடலூர்: கடலூரில் குடுகுடுப்பைக்காரர்களுக்கு ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்துள்ளார். சிறப்பு முகாமில் சாதி சான்றிதழ் கோரியவர்களிடம் விண்ணப்பங்களை பெற்ற தாசில்தார் பலராமன் பேட்டியளித்துள்ளார். முகாமில் தற்காலிக சான்றிதழ் தரப்பட்ட நிலையில் ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்துள்ளார்.