ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 23.4.2017ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பணம், முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதவிர, பங்களாவின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் கடந்த 2017-ல் தற்கொலை செய்து கொண்டார். சிபிஐ, ஊட்டி போலீசாரின் விசாரணையில் கடந்த 4 ஆண்டாக வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை.