திருச்சியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மருத்துவருக்கு குண்டாஸ்

திருச்சி: திருச்சியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மருத்துவருக்கு குண்டாஸ் போடப்பட்டுள்ளது. குழந்தைகள் நல மருத்துவர் ரமேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 13-ம் தேதி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சிறுமியின் தாயார் அளித்த புகாரில் மருத்துவர் ரமேஷ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளார்.

Related Stories: