புழல்: சோழவரம் அருகே புதிய எருமைவெட்டிப்பாளையம், தேவனேரி கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் கணேஷ் (15). அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை கணேஷ், வழக்கம் போல் பள்ளிக்கு சென்றான். மாலை 3 மணியளவில் வகுப்பறையில் பாடங்களை கவனித்து கொண்டிருந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்தான். இதை பார்த்ததும், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவனது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் பள்ளிக்கு வந்தனர்.