ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கிபி 1746ம் ஆண்டு டச்சு நாணயம் கண்டெடுக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வாகரை கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். வேதியியல் விரிவுரையாளரான இவர் தனது வீட்டை புதுப்பிக்கும்போது ஒரு பழைய நாணயத்தை கண்டெடுத்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அரிஸ்டாட்டில், லட்சுமணமூர்த்தி ஆகியோரிடம் கேட்டறிந்தார். அந்த நாணயத்தை ஆய்வு செய்த பின் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘கிபி 1602ல் டச்சு கிழக்கு இந்திய கம்பெனியினர், விரிங்கெ ஊஸ்ட்டிண்டிஸ் கம்பெனி ஒன்றை தொடங்கினர். இது தான் உலகின் முதல் பன்னாட்டு வணிக நிறுவனம் ஆகும். இந்த கம்பெனி தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளிலும், இலங்கையிலும் வணிகம் செய்தபோது புழக்கத்தில் விடப்பட்ட நாணயம் தான் இது. இந்த நாணயம் கி.பி 1746ம் ஆண்டு அச்சிடப்பட்டிருந்தது.