திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் செவிலியர் மாணவி உயிரிழந்ததாக 11 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மற்றும் இறந்த மாணவியின் உறவினர்கள் என 10 பேரை மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறை அழைத்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
