பாக்பாத்: உத்திரப்பிரதேசத்தில் அசாதுதின் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிடுவதால் எதிர்கட்சி வாக்குகள் சிதறும் என்று பாரதிய விவசாய சங்கங்கள் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரி போராட்டம் நடத்தி வரும் ராகேஷ் திகாயத், உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை விவசாயிகள் ஒன்று சேர்ந்து தோற்கடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். உத்திரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கு நீதி கேட்டு மகா பஞ்சாயத்து நடத்தி வரும் ராகேஷ் திகாயத் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.