மதுரை: விமான நிலையத்தை போன்று மதுரை ரயில் நிலையத்தில் கார் பார்க்கிங் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மதுரை ரயில்வே நிலைய கார் பார்க்கிங், 3 மாதத்திற்கு ஒருமுறை தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி கார் பார்க்கிங் கட்டணமாக முதல் 3 மணி நேரத்திற்கு 30 ரூபாயும், அடுத்த 3 மணி நேரத்திற்கு 50 ரூபாயும் அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 70 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.