திருவள்ளூர்: கடம்பத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சுஜாதா சுதாகர் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணைத் தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் வி.எம்.சுரேஷ், கோ.ஹரிதரன், டி.யாமினி, மூ.நரேஷ்குமார், பா.யோகநாதன், நா.வெங்கடேசன், வி.கோவிந்தம்மாள் விஜயராகவன், எஸ்.பிரசாந்த், சி.தயாளன், சுபப்பிரியா சக்திதாஸன், பா.சுமதி பாபு, கேபிஎஸ்ஆர்.கார்த்திகேயன், மு.நீலாவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.