பேராவூரணி:சேதுபாவாசத்திரம் ஒன்றியம் வீரியங்கோட்டை கிராமத்தில் கல்லனை கால்வாய் கிளை வாய்க்காலில் பாலம் இல்லாததால் சடலத்தை இறுதிச்சடங்கு செய்ய ஆற்றின் குறுக்கே தண்ணீரில் இறங்கி தூக்கி செல்லும் அவலத்திற்கு தமிழக முதல்வர் தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள விரியங்கோட்டை ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியிலிருந்து இறந்தவர்களின் சடலத்தை, இவர்களுக்கு சொந்தமான சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்கு கல்லனை கால்வாய் கிளை வாய்க்காலின் குறுக்கே பாலம் இல்லாததால் ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் சடலத்துடன் ஆற்றில் இறங்கி கொண்டு செல்லும் அவலத்தை பல ஆண்டுகளாக அனுபவத்து வருகின்றனர்.