அகமதாபாத்: குஜராத் மாநிலம், சவுராஷ்டிரா பிராந்தியத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால், ராஜ்கோட், ஜம்னாநகர் மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. சாலைகள், வீடுகளில் இடுப்பளவுக்கு வெள்ளம் ஓடியது. இதனால், பீதி அடைந்த மக்கள் வீடுகளின் மீது பாதுகாப்பாக ஏறி நின்றனர். சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை வெள்ளம் அடித்துச் சென்றது. ஒரு காரில் இருந்த பெண்ணும், 2 ஆண்களும் வெள்ளத்தில் மூழ்கி இறந்தனர்.