அமைச்சர் எ.வ.வேலு தகவல் 10 ஆயிரம் கி.மீ. சாலைகள் 5 ஆண்டில் செப்பனிடப்படும்

சென்னை: சட்டசபையில் நடந்த மானியக் கோரிக்கை விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் (விருத்தாசலம்) பேசுகையில், “தொகுதியில் பழுதான சாலைகளை செப்பனிட்டு தர வேண்டும்” என்று வலியுறுத்தினார். இதற்கு பதில் அளித்து பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் “ஊராட்சி சாலை, ஒன்றிய சாலைகள் அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு செப்பனிடப்படும். ஆண்டுக்கு 2 ஆயிரம் கி.மீ. என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு செப்பனிடப்படும். ஆனால், சாலைகள் செப்பனிடப்படுவது குறித்து உறுப்பினர்கள் என்னிடம் நேரடியாக மனு கொடுக்கிறார்கள். இது அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து முறையாக வரவேண்டும். மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து பரிந்துரை வந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.

Related Stories: