குவாலியர்,:குவாலியரில் போதையில் ராணுவ வாகனத்தை சேதப்படுத்திய மாடல் அழகி மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், கடந்த சில தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் 22 வயதான இளம்பெண் ஒருவர் போதையில் நடந்து சென்றார். அவர், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனத்தின் ஹெட்லைட்டை திடீரென தனது காலால் உதைத்து உடைத்தார். வாகனத்தில் இருந்த ராணுவ அதிகாரி அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினார். ஆனால், அந்த பெண் அவரை பின்னுக்குத் தள்ளினாள். அவ்வழியாக வந்தவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டினார். இந்த பெண்ணின் அடாவடி செயலால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அந்த பெண்ணை அந்த இடத்தில் இருந்து அழைத்து செல்ல போலீசாருக்கு அரை மணி நேரத்திற்கு மேல் ஆனது. தகவலறிந்த பதவ் போலீசார், பெண் போலீசாரின் உதவியுடன் அந்த ெபண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் குவாலியரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.