கண்டாச்சிபுரம் : விழுப்புரம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறு சிறு பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.விழுப்புரம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து திருப்பதி, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கு செல்வோரும், வெளி மாநிலங்களிலிருந்து புதுவை, விழுப்புரத்திற்கு வரும் வாகன ஓட்டிகளும் பெரும்பாலும் இவ்வழியையே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விழுப்புரம் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற பொதுமக்களும் இவ்வழியையே நாள் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர்.