திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீர் என தீப்பிடித்து எரிந்தது. இதில், பயணம் செய்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். செங்கல்பட்டு அடுத்த காவூர் கிராமத்தை சேர்ந்த 4 பேர் ஒரு காரில், கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு நேற்று மாலை சென்றுள்ளனர். அப்போது, திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற கார் கரும்புகையுடன் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.