புதுடெல்லி: இந்தியாவை சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கியுள்ளனர். இவற்றை மீட்டு வருவதற்கான நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது. சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் போடப் போவதாக 2014 தேர்தலில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதி இன்று வரையிலும் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. இந்நிலையில், இந்தியர்களின் வங்கி கணக்குகளின் பட்டியலை, ‘தானியங்கி தகவல் பரிமாற்றம்’ ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் சுவிட்சர்லாந்து அரசு வழங்கி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு, செப்டம்பரில் முதல் பட்டியலை அது அளித்தது. கடந்தாண்டு செப்டம்பரில் 2வது பட்டியலை வழங்கியது.